கத்தாரில் நோன்புப் பெருநாள் ஏப்ரல் 10 திகதி கொண்டாடப்படும் – உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியானது

கத்தாரில் நோன்புப் பெருநாள் ஏப்ரல் 10 திகதி கொண்டாடப்படும் என்பதாக உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கத்தாரின் பிறைக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஷவ்வால் மாத்திற்கான தலைப் பிறை கத்தாரில் தென்படாமையினால் ரமழான் மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்படவுள்ளதாக கத்தார் பிறைக்குழு சற்று நேரத்திற்கு முன்னா் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் படி ஏப்ரல் மாதம் 10 திகதி கத்தாரில்  நோன்புப் பெருநாள் தினம் கொண்டாப்படவுள்ளது.

அனைவரும் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.

Also Read: கத்தாரில் நோன்புப் பெருநாள் தொழுகை அதிகாலை 5.32க்கு நடைபெறும்!

Leave a Reply