கத்தாரில் விசா வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த மூன்று ஆசிய நாட்டவர்கள் கைது!

உள்துறை அமைச்சகத்தின் (MoI) குற்றப் புலனாய்வுத் துறை, விசா கடத்தலில் ஈடுபட்டதற்காகவும், நிதி ஆதாயங்களுக்காக அதை ஊக்குவித்ததற்காகவும் ஆசிய நாட்டினரைச் சேர்ந்த மூன்று நபர்களைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

சந்தேகத்திற்கிடமான விசா கடத்தல் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியானதும் விசாரணை உள்துறை அமைச்சின் அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முழுமையான தேடுதல் நடவடிக்கைகளுக்குப் பிறகு, மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர், மேலும் விசாரணையின் போது, அவர்கள் குற்றம் சாட்டப்பட்டதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட முத்திரைகள், அட்டைகள் மற்றும் மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக மூவரும் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

போலி நிறுவனங்களுடனான விசா பரிவர்த்தனைகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கத்தார் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தகைய விசா மோசடிகள் தொடர்பான புகார்களை Metrash2 செயலி மூலம் அளிக்கலாம் என்றும் கத்தார் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அறிவித்துள்ளது

Also Read: கத்தார் சாலையில் சாகசம் காட்டிய ஓட்டுநர் கைது, கார் நசுக்கி அழிப்பு! (வீடியோ)

Leave a Reply