FIFA கால்ப்பந்து கத்தார் 2022ன் முதல் போட்டி சற்று நேரத்திற்கு முன்னர் ஆரம்பம்!

ஃபீபா கால்ப்பந்து கத்தார் 2022ன் முதல் போட்டி சற்று நேரத்திற்கு முன்னர் ஆரம்பமாகியுள்ளது.  கத்தார் மற்றும் ஈக்வடார் அணிகளுக்கு இடையே முதல் போட்டி ஆரம்பமாகியுள்ளது.

டோஹாவிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள புதிதாக உருவாக்கப்பட்ட பிரமாண்டமான விளையாட்டரங்கான அல்பைத்தில் போட்டி ஆரம்பமாகியுள்ளது. இந்த விளையாட்டரங்கான 60 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை கண்டுகளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டள்ளது.

அரபு நாடொன்று நடத்தும் முதல் கால்ப்பந்து உலகக் கோப்பை என்பதோடு, கத்தார் கலந்து கொள்ளும் முதல் உலகக்கிண்ணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: 22வது கால்ப்பந்து உலகக் கோப்பை: கத்தார் உருவாக்கியுள்ள புதிய மாற்றங்கள்!

Leave a Reply