கத்தாரிலுள்ள இலங்கைத் தூதகரம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

கத்தாரிலுள்ள இலங்கைத் தூதகரம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் ஒன்றை இன்று (19.05.2022) விடுத்துள்ளது. தனது உத்தியோக பூர்வ முகநூல் பக்கம் ஊடாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், எதிர்வரும் 2022 மே மாதம் 27ம் திகதி வெள்ளிக்கழமை காலை 9.00 மணி முதல் 12.00 வரை கொன்சியூலர் மற்றும் தொழிலாளர் சம்மந்தமான சேவைகளை வழங்குவதற்காக இத்தூதுவராலயம் திறக்கப்பட்டிருக்கும் என்பதை இத்தால் அன்புடன் அறியத் தருகின்றோம் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலானது தமிழ், சிங்களம், மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இதையும் படிங்க: கத்தார் வாகன ஓட்டுநர்கள் கவனத்திற்கு! இதை செய்தால் 500 ரியால்கள் அபராதம்!

Leave a Reply