ஒலிம்பிக் பளு தூக்கும் போட்டியில் கத்தார் வீரர் இப்ராஹீம் தங்கம் வென்று அசத்தல்

கத்தாரின் சார்பாக டோக்கியோ ஒலிம்பிக் பளு தூக்கும் போட்டியில் பங்கு பற்றிய Fares Ibrahim அவர்கள் தங்கம் வென்று வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளார். கத்தாருக்கு கிடைத்த முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் இதுவாகும்.

23 வயதான இப்ராஹீம் அவர்கள் 96KM பிரிவின் கழ் 402 KG பாரத்தை தூக்கு தங்கப் பதக்கத்தை வென்றதோடு, ஒலிம்பிக் சாதனையையும் நிலைநாட்டியுள்ளார்.

வெனிசூலா நாட்டு வீரர் Keydomar Giovanni Vallenilla Sánchez அவர்கள் இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தையும், ஜோர்ஜியா நாட்டு வீரம் Anton Pliesnoi  அவர்கள் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.

Leave a Reply