Qatar Tamil News
கத்தாரில் ஜனாஸாத் தொழுகைக்கு சமூகமளிப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

மிக முக்கியமான வேண்டுகோள் – அன்பான சகோதரர்களே!
கொரோனா நோயிலிருந்து எம்மையும் எமது உறவுகளையும் பாதுகாத்துக்கொள்வது எமது கடமையாகும்.
அந்த வகையில் கத்தார் அபூஹமூர் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும் போது சுகாதார முறைகளை பின்பற்றி நடப்பதில் அசிரத்தையாக இருப்பதை கடந்த ஜனாஸா நல்லடக்கங்களில் போது CDF Qatar குழுவினரால் கவனிக்க கூடியதாக இருந்தது. அதனாலேதான் CDF Qatar இந்த விழிப்புணர்வு பதிவை செய்து உங்களுக்கு நியாபகமூட்ட விரும்புகிறது.
எனவே, ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொள்பவர்கள் பின்வரும் விடயங்களை கட்டாயம் கவனத்தில் எடுத்துக்கொள்ளுமாறு அன்பாக வேண்டிக்கொள்கிறோம்!








அன்பான சகோதரர்களே!
நாம் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல், கத்தார் அரசாங்கம் எங்களுக்கு தந்திருக்கும் சந்தர்ப்பத்தை தவறாக பயன்படுத்தாமல், மேலே கூறப்பட்ட விடயங்களை பின்பற்றி இந்த கொரோனா நோயின் தாக்கத்திலிருந்து எம்மையும், எமது உறவுகளையும் பாதுகாக்க வேண்டும் என CDF Qatar உங்களிடம் அன்பாக கேட்டுக்கொள்கிறது.
குறிப்பு : சுகாதார நடைமுறைகளை மீறி நடந்தால் எதிர்வரும் காலங்களில் ஜனாஸா அடக்கம் செய்யும் போது நாம் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதையும் மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


