கத்தாரில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகக்காக 650 மசூதிகள் தயார் நிலையில்!

கத்தாரில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகக்காக 650 மசூதிகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மசூதிகளைத் தவிர்ந்து பொதுப்பூங்காக்கள், மைதானங்கள், கடற்கரைகள் மற்றும் முக்கிய சுற்றுலா புள்ளிகளும் (picnic points) ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்காக தயார் செய்யப்பட்டுள்ளதாக அவ்காப் அறிவித்துள்ளது.

ஹஜ்ஜுப் பொருநாள் தொழுகைக்கான உத்தியோக பூர்வ நேரமாக அதிகாலை 4.58 அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரின் ஒவ்வொரு முக்கிய நகரிலும், ஒன்றுக்கு மேட்பட்ட மசூதிகளும், மேலதிகமாக தைானங்கள் தொழுகைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கத்தார் அதிபர் ஹமத் பின் அல்தானி அவர்கள் லுசைல் நகரில் அமைந்துள்ள மைதானத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவார் என்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மசூதிகளின் பட்டியலுக்கு – கிளிக் செய்க!

இதையும் படிங்க: கத்தாரிலிருந்து பெருநாளைக்கு தாயகம் திரும்ப இருப்போருக்கான முக்கிய அறிவித்தல்!

Leave a Reply