Qatar Tamil News

மீண்டும் தீவிரமடையும் கொரோனா! மார்ச் 26 முதல் புதிய கட்டுப்பாடுகள் விதித்தது கத்தார்!

கத்தாரில் கொரோனா தொற்று  தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சில கடுமையான COVID-19 கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டுவருவதற்கு கத்தார் அமைச்சரவை இன்று (மார்ச்-09)  அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு விதிக்கப்படும் புதிய கட்டுப்பாடகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (March-26) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள்
“Clear Qatar” சான்றிதழ் கொண்ட உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் 50 சதவீத அளவிலும்,, அது இல்லாதவர்கள் 15 சதவீத அளவிலும் திறக்கப்படவுள்ளன. உணவகங்களுக்கான வெளிப்புற வருகை 30 சதவீதம் வரை காணப்படலாம்.

பொது போக்குவரத்து
தோஹா மெட்ரோ மற்றும் பொது போக்குவரத்து வாகனங்கள் வார நாட்களில் 30 சதவீத அளவிலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 20 சதவீத அளவிலும் இயங்கும்.  மேலும் புகைத்தலுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும், மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களில் உணவு மற்றும் பானம் அனுமதிக்கப்படமாட்டாது.

சமூக ஒன்றுகூடல்
வீடுகள் மற்றும் மஜ்லிஸ்களில் உள்ளக கூட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன, வெளிப்புற கூட்டங்கள் ஐந்து நபர்களுக்குள் மட்டுப்படுத்தப்படவேண்டும்.  ஒரே வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் குளிர்கால முகாம்களில் ஒன்றாக இருக்க முடியும், மேலும் மறு அறிவிப்பு வரும் வரை மூடிய மற்றும் திறந்தவெளி இடங்களில் திருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைகள் மற்றும் பூங்காக்கள்
ஒரே வீட்டில் வசிக்கும் அதிகபட்சம் இரண்டு நபர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கடற்கரைகள், பொது பூங்காக்கள் மற்றும் தோஹா கார்னிச் (விளையாட்டு மைதானங்கள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் உட்பட)

வணிக வளாகங்கள்
வணிக வளாகங்கள், மொத்த சந்தைகள், அழகு நிலையங்கள் மற்றும் முடிதிருத்தும் கடைகள் 30 சதவீத அளவில் இயங்கும்; 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வணிக வளாகங்கள் மற்றும் முழு விற்பனை சந்தைகளில் நுழைய அனுமதி வழங்கப்படமாட்டாது. மேலும் மறு வரும் வரை கேளிக்கை பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் மூடப்படவுள்ளது.

பள்ளிவாசல்கள்
மசூதிகள் தினசரி தொழுகைகளைகளும், வெள்ளிக்கிழமை பிரார்த்தனையும் தொடர்ந் நடைபெறும் என்றாலும், கழிப்பறைகள் மற்றும் அங்க சுத்தி (வுழு) வசதிகள் மூடப்பட்டிருக்கும்

ஜிம்கள் மற்றும் ஸ்பாக்கள்
சுகாதார கிளப்புகள், உடல் பயிற்சி மையங்கள், மசாஜ் சேவைகள்,  saunas, Jacuzzi சேவைகள் மற்றும் மொராக்கோ மற்றும் துருக்கிய குளியல் ஆகியவை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும், விருந்தினர்களுக்கான ஹோட்டல்களில் ஜிம்களைத் தவிர.மேலும் அறிவிக்கும் வரை அனைத்து நீச்சல் குளங்கள் மற்றும் நீர் பூங்காக்கள் மூடப்படவுள்ளது

சுகாதார வசதிகள்
தனியார் சுகாதார வசதிகள் 70 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. நிறுவனங்களுடன் பணிபுரியும் நேரத்தில் துப்புரவு மற்றும் விருந்தோம்பல் நிறுவனங்களால் வழங்கப்படும் சேவைகளின் செயல்பாட்டு திறன் 30 சதவிகித அளவில் வரையறுக்கப்பட்டுள்ளது.

படகு வாடகை/சவாரி
ஒரே வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கான வாடகை சேவைகளைத் தவிர்த்து, படகுகள், சுற்றுலா படகுகள் மற்றும் இன்ப படகுகளின் வாடகை சேவைகள் இடைநிறுத்தப்படுகின்றன.ஒரே வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கப்பலில் இருப்பதை உறுதி செய்வது படகு மற்றும் படகு உரிமையாளர்களின் பொறுப்பாகும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பொதுமக்கள் அவைரும் வீட்டைவிட்டு வெளியேறும் போது முகக்கவசம் அணிந்திருப்பதும், தங்களது கைத்தொலைபேசிகளில் Ethiraz  செயலியை நிறுவியிருப்பதும் கட்டாயமாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: